search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர், 

    திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 49). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முந்தினம் வேலை முடிந்து இருங்காட்டுகோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் மண்ணூர் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் கிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு அடுத்த நந்திபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (22). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் வழியாக சென்றார். அப்போது எதிரே வந்த லாரி சீனிவாசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

    Next Story
    ×