search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து பலி

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் புதுக்கோட்டை வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர், திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×