என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு
Byமாலை மலர்30 Oct 2020 9:20 AM GMT (Updated: 30 Oct 2020 9:20 AM GMT)
திருக்காட்டுப்பள்ளி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி பஜனைமட தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது26). இவர் திருவெறும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தசரதன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கல்லணை வழியாக பழமார்நேரி திரும்பி கொண்டிருந்தார். மகாதேவபுரம் கல்லறை தோட்டம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த வேப்ப மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தசரதன் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தசரதனின் தந்தை இளங்கோவன் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி பஜனைமட தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது26). இவர் திருவெறும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தசரதன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கல்லணை வழியாக பழமார்நேரி திரும்பி கொண்டிருந்தார். மகாதேவபுரம் கல்லறை தோட்டம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த வேப்ப மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தசரதன் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தசரதனின் தந்தை இளங்கோவன் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X