search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

    சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    * சென்னையில் 13 இடங்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன.

    * திமுக ஆட்சியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

    * ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    * சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×