search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

    நடுக்கடலில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

    பின்னர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர். இதனால் நேற்று காலை பெரும்பாலான படகுகள், குறைவான மீன்களுடன் கரை திரும்பின.

    இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல், மிரட்டலால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி வருவதாக ராமேசுவரம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்ணாடி பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில், ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×