என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிலாதுநபி திருநாள் : தமிழக கவர்னர் வாழ்த்து
Byமாலை மலர்29 Oct 2020 11:24 PM GMT (Updated: 29 Oct 2020 11:24 PM GMT)
சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் என மிலாதுநபியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
மிலாதுநபியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
முகமதுநபியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் மிலாதுநபி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான நாளில், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒழுக்கம், இரக்கம், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் தொண்டு போன்ற உயர்ந்த மனிதநேயமிக்க பண்புகளை கடைபிடித்து வாழ்ந்தவர் முகமதுநபி. மனிதகுலத்திற்கு நீதி மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையை காட்டியவர். அனைவருக்கும் இரக்கத்தையும் கருணையையும் போதித்தார். முகமது நபியின் கொள்கைகளால் நம் வாழ்க்கை ஒளிரட்டும்.
இந்த நாள், சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். இந்த நன்னாளில் சமூகத்தில் அன்பு, அமைதியை வளர்ப்பதற்கு அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மிலாதுநபியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
முகமதுநபியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் மிலாதுநபி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான நாளில், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒழுக்கம், இரக்கம், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் தொண்டு போன்ற உயர்ந்த மனிதநேயமிக்க பண்புகளை கடைபிடித்து வாழ்ந்தவர் முகமதுநபி. மனிதகுலத்திற்கு நீதி மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையை காட்டியவர். அனைவருக்கும் இரக்கத்தையும் கருணையையும் போதித்தார். முகமது நபியின் கொள்கைகளால் நம் வாழ்க்கை ஒளிரட்டும்.
இந்த நாள், சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். இந்த நன்னாளில் சமூகத்தில் அன்பு, அமைதியை வளர்ப்பதற்கு அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X