என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உணவுதானிய சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா- சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
Byமாலை மலர்29 Oct 2020 12:46 PM GMT (Updated: 29 Oct 2020 12:46 PM GMT)
ஆத்தூர் கிராமத்தில் உணவுதானிய சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் ரூ.14 லட்சத்து 8 ஆயிரத்தில் உணவுதானிய சேமிப்புகிடங்கு அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்நாட்டுவிழா நேற்று நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது ஆத்தூர் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரக்கோணத்திலிருந்து பொய்கைபாக்கம், ஆத்தூர், உரியூர், நகரிகுப்பம் வழியாக தக்கோலம், பேரம்பாக்கம் வரை பஸ்போக்குவரத்து நீடிக்கப்படும் என்றார். மாற்று கட்சினர் பலர் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சிக்கு அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மீனா ரகுபதி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X