என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும்- புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சாந்தா பேட்டி
Byமாலை மலர்29 Oct 2020 9:35 AM GMT (Updated: 29 Oct 2020 9:35 AM GMT)
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும் என புதிதாக பொறுப்பேற்ற திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஆனந்த் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்று கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் நெல் உற்பத்தி என்பது தான் அதிகம். பாசன வசதி, தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் மாசு அடைவதால் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஆனந்த் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்று கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் நெல் உற்பத்தி என்பது தான் அதிகம். பாசன வசதி, தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் மாசு அடைவதால் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X