search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தலைக்கவசம் அணியாத 355 பேர் மீது வழக்கு

    தலைக்கவசம் அணியாத 355 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 14 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 300 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 55 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 10 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 17 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.48 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×