search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான கார்
    X
    விபத்துக்குள்ளான கார்

    கொடைக்கானலில் பள்ளத்தில் கார் பாய்ந்து 5 பேர் படுகாயம்

    கொடைக்கானலில் பள்ளத்தில் கார் பாய்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடைக்கானல்:

    புதுச்சேரி எம்.ஜி.ரோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ் காஷ்மீர் (வயது 51). இவர், தனது சொகுசு காரில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள், வட்டக்கானல் பகுதிக்கு சென்றனர். காரை சுஜி என்பவர் ஓட்டினார். அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லாரன்ஸ் காஷ்மீர், சுஜி, தண்டபாணி (51), அழகன் (28), விஜயகுமார் (38) ஆகியோர் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சுஜி, அழகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×