search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

    மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மானூர்:



    நெல்லை அருகே உள்ள மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் மகேஷ் (வயது 22). இவர் நேற்று மானூர் தென்புறம் உள்ள கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தின் பின்புறம் வயல்வெளியில் உள்ள கிணற்று படியில் இறங்கி நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து குளித்துக் கொண்டு இருந்தார்.

    திடீரென அவர் கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிசார் அகமது, மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் உள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    கங்கை கொண்டான் மற்றும் பேட்டை தீயணைப்பு துறையினர் இணைந்து கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மகேசை பிணமாக மீட்டனர். பின்பு அவரது உடலை போலீசார் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×