என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்28 Oct 2020 9:32 AM GMT (Updated: 28 Oct 2020 9:32 AM GMT)
மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானூர்:
நெல்லை அருகே உள்ள மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் மகேஷ் (வயது 22). இவர் நேற்று மானூர் தென்புறம் உள்ள கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தின் பின்புறம் வயல்வெளியில் உள்ள கிணற்று படியில் இறங்கி நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து குளித்துக் கொண்டு இருந்தார்.
திடீரென அவர் கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிசார் அகமது, மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் உள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
கங்கை கொண்டான் மற்றும் பேட்டை தீயணைப்பு துறையினர் இணைந்து கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மகேசை பிணமாக மீட்டனர். பின்பு அவரது உடலை போலீசார் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X