search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 20), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளி அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தினகரன் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர். உடனே தினகரன் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24), சதீஷ் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×