search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    கட்டுமான பணியின்போது மண் சரிந்து தொழிலாளி பலி

    பொன்னேரி அருகே கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.
    செங்குன்றம்:

    பொன்னேரியை அடுத்த காரனோடை பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பொக் லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். இந்த பணியில் காரனோடை பகுதியை சேர்ந்த வில்லாளன் (வயது 56) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    பின்னர் வில்லாளன், தோண் டப்பட்ட பள்ளத்தில் இறங்கினார். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்த அவர், பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், பலியான வில்லாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×