என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டுமான பணியின்போது மண் சரிந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Oct 2020 2:08 AM GMT (Updated: 28 Oct 2020 2:08 AM GMT)
பொன்னேரி அருகே கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.
செங்குன்றம்:
பொன்னேரியை அடுத்த காரனோடை பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பொக் லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். இந்த பணியில் காரனோடை பகுதியை சேர்ந்த வில்லாளன் (வயது 56) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் வில்லாளன், தோண் டப்பட்ட பள்ளத்தில் இறங்கினார். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்த அவர், பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், பலியான வில்லாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த காரனோடை பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பொக் லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். இந்த பணியில் காரனோடை பகுதியை சேர்ந்த வில்லாளன் (வயது 56) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் வில்லாளன், தோண் டப்பட்ட பள்ளத்தில் இறங்கினார். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்த அவர், பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், பலியான வில்லாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X