search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்- பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாகத் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்,

    ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும். 

    அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×