என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்26 Oct 2020 1:16 PM GMT (Updated: 26 Oct 2020 1:16 PM GMT)
கூத்தாநல்லூரில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபியுதீன் (வயது 57). இவர் கூத்தாநல்லூர் பள்ளிவாசல் ஒன்றில் நிர்வாக குழு பொறுப்பில் உள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகமது ரபியுதீனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் முகமது ரபியுதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X