என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதம்
Byமாலை மலர்26 Oct 2020 12:22 PM GMT (Updated: 26 Oct 2020 12:22 PM GMT)
கள்ளக்குறிச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பா.ஜ.க.வினர் திருமாவளவனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதை அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜ.க.வினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் பா.ஜ.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் உள்பட 36 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தனர். பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கள்ளக்குறிச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X