என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி
Byமாலை மலர்26 Oct 2020 10:58 AM GMT (Updated: 26 Oct 2020 10:58 AM GMT)
உசிலம்பட்டி அருகே லாரியும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 2 பேர் பலியாயினர்.
உசிலம்பட்டி:
மதுரையில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு மினி லாரி தேனி மாவட்டம் வருஷநாடு வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளும் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த மாட்டுத்தீவன மூடைகள் ரோட்டின் கிடந்தன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த உசிலம்பட்டி அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் விவித்(வயது 25), லாரியில் வந்த தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகன்(50) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதே லாரியில் வந்த தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(45), இவருடைய மகன் செல்வமணி(14), பழனிசாமி மகன் பெருமாள்(30) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அந்த 3 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இந்த விபத்தில் பலியான விவித், முருகன் ஆகிய 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X