search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைக்கண்ணு
    X
    அமைச்சர் துரைக்கண்ணு

    ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பு, பெரிய கோவிலில் தமிழில் வழிபாடு, அமைச்சர் உடல்நிலை பின்னடைவு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    ஓபிசி இட ஒதுக்கீடு, அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு, சிஎஸ்கே ரசிகர்களுக்காக டோனி மனைவி வெளியிட்ட கவிதை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * மருத்துவ படிப்பில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    * திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் இன்று டோக்கன் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்.

    * நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என மகாராஷ்டிர முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    * சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் போர் செய்வது பற்றி பிரதமர் மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என உ.பி. பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    * நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி திலிப் ரேக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 71.37 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

    * மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    * கேரள மாநிலத்தில் கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றுசுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    * மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    * மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு முதல் முறையாக தமிழில் தேவாரம், திருமுறை பாடி வழிபாடு நடந்தது.

    * தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால் 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.

    * 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

    * நமீபியா நாட்டின் கடற்கரைகளில் சீல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

    * இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    * ஸ்பெயின் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியதால், அந்நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அவசரகால நிலை மே மாத தொடக்கம் வரை நீடிக்கும் என்று பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார். 

    * சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இதனையடுத்து ரசிகர்களுக்காக, உணர்வுப்பூர்வமான கவிதை ஒன்றை கேப்டன் டோனியின் மனைவி சாக்சி வெளியிட்டுள்ளார். 

    * ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டிகள் துபாய் மற்றும் அபு தாபி மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    * சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே, நவம்பர் 12-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் அறிவித்துள்ளது.
    Next Story
    ×