search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர், அரியலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 2 பேரும், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,106 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,003 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 399 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 3 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,322 ஆக உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,701 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 416 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றைப் படையாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×