என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசியில் 7 பேர் மட்டுமே பாதிப்பு - நெல்லை, தூத்துக்குடியில் 64 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்25 Oct 2020 2:41 AM GMT (Updated: 25 Oct 2020 2:41 AM GMT)
நெல்லை, தூத்துக்குடியில் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தென்காசியில் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 45-ஆக உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 366 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 208 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 486 பேர் வீடு திரும்பி உள்ளனர். 147 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 735 ஆக உயர்ந்து உள்ளது.
அதே போன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 117-ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 489 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 129 பேர் கொரோனா பாதிப்பால் இறந்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 45-ஆக உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 366 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 208 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 486 பேர் வீடு திரும்பி உள்ளனர். 147 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 735 ஆக உயர்ந்து உள்ளது.
அதே போன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 117-ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 489 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 129 பேர் கொரோனா பாதிப்பால் இறந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X