search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருப்பூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

    திருப்பூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் கருவம்பாளையம் கே.ஆர்.ஆர். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரகாஷ் (வயது 27). சிட்கோ பகுதியில் பணிபுரிந்து வந்த இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் இருந்து சிட்கோ நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியும், இவரது மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பிரகாசுக்கு படுகாயம்அடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த பிரகாசை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×