search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நல்லம்பள்ளி அருகே பெண் தற்கொலை

    நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த பேட்டையான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மனைவி சாம்பாவதி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்பாவதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பாவதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×