search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 13,360 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 105 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 12,727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 528 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது.

    இதில் விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றி வரும் கண்டக்டர், திண்டிவனம் வணிகவரி அலுவலக ஊழியர் உள்பட 49 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,409 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    Next Story
    ×