search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செங்கோட்டை அருகே மது விற்ற 2 பேர் கைது

    செங்கோட்டை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனை செய்ததாக அப்பகுதியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கற்குடி கிராம பகுதியில் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்றதாக அப்பகுதியை சேர்ந்த கலைசாமி (68) என்பவரை கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×