என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகளா?- அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்24 Oct 2020 9:10 AM GMT (Updated: 24 Oct 2020 9:10 AM GMT)
குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகளா? என்று பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் கடந்த 21-ந்தேதி வண்டல் மண் எடுத்தபோது டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் டைனோசர் முட்டைகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவிலான படிமங்கள் சிலவற்றை குன்னம் தாசில்தார் சின்னத்துரை கைப்பற்றி வருவாய் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
இந்த உருண்டை வடிவிலான படிமங்கள் டைனோசர் முட்டையா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்று திருச்சி, அரியலூர் அருங்காட்சியகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உருண்டை வடிவிலான படிமங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் படிமங்கள் சிலவற்றை மேல் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் கடந்த 21-ந்தேதி வண்டல் மண் எடுத்தபோது டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் டைனோசர் முட்டைகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவிலான படிமங்கள் சிலவற்றை குன்னம் தாசில்தார் சின்னத்துரை கைப்பற்றி வருவாய் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
இந்த உருண்டை வடிவிலான படிமங்கள் டைனோசர் முட்டையா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்று திருச்சி, அரியலூர் அருங்காட்சியகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உருண்டை வடிவிலான படிமங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் படிமங்கள் சிலவற்றை மேல் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X