என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி
Byமாலை மலர்24 Oct 2020 6:42 AM GMT (Updated: 24 Oct 2020 6:42 AM GMT)
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். இவரது மகன் சதிஷ்குமார் (19) விருதுநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மாரீஸ்வரி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது கல்லூரி செல்ல தயாரான மாணவன் சதிஷ்குமார், தனது சட்டையை மின்சாரத்தில் இயங்கும் சலவை பெட்டியின் மூலம் தேய்க்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X