search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே

    சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவு 24-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து அக்டோபர் 26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்

    திருச்சியில் இருந்து அக்டோபர் 26- ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 26-ம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    இதுகுறித்த முழு விவரங்களை ரெயில்வே இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×