search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராஜபாளையம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    ராஜபாளையம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கவிமணி தேசிய விநாயகம் தெருவை சேர்ந்தவர் பிச்சை (வயது 70). இவரது மகன் கார்த்தீஸ்வரன் (23). இவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தவர் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×