search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

    கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    கீழராஜகுலராமன் போலீசார் குறிச்சியார்பட்டி பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே ரெங்கப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது60) என்பவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் விற்பனைக்காக 210 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×