search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

    நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் தில்லைபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லலிதா (வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே கீரை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.

    இதையடுத்து லலிதா வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அப்போது அந்த மர்மநபர் லலிதா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சேலத்தில் நகைபறிப்பு வழக்கு ஒன்றில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிராங்கிளின் குமார் (33) என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் லலிதாவிடம் நகையை பறித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருட்டு போன நகையை மீட்டனர்.
    Next Story
    ×