என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
Byமாலை மலர்23 Oct 2020 5:44 PM GMT (Updated: 23 Oct 2020 5:44 PM GMT)
நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் தில்லைபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லலிதா (வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே கீரை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.
இதையடுத்து லலிதா வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அப்போது அந்த மர்மநபர் லலிதா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சேலத்தில் நகைபறிப்பு வழக்கு ஒன்றில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிராங்கிளின் குமார் (33) என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் லலிதாவிடம் நகையை பறித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருட்டு போன நகையை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X