search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஆலத்தூர் அருகே விபத்தில் சிக்கிய முதியவர் பலி

    ஆலத்தூர் அருகே விபத்தில் சிக்கிய முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன்(வயது 65). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் நக்கசேலம் பிரிவு ரோட்டில் சென்றபோது வாகனம்மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×