search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியார் நகரில் தனது உறவினர் கிவேதா (65) என்பவருடன் வசித்து வந்தவர் நர்மதா (வயது19). இலங்கையை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் வீட்டில் இருக்கும்போது மின்விசிறியில் நர்மதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×