என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்23 Oct 2020 12:04 PM GMT (Updated: 23 Oct 2020 12:04 PM GMT)
திருவள்ளூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டி குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் (வயது 22) .இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிஷ் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தந்தை சீனிவாசன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X