என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்23 Oct 2020 9:25 AM GMT (Updated: 23 Oct 2020 9:25 AM GMT)
கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாடு ஊராட்சி கடம்பலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பாலாமணி. இவர்களுடைய மகன் பாலமுருகன் (வயது 20).
இவர் கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு அரசம்பட்டியில் இருந்து ஓடக்காடு செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த பாலமுருகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X