search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

    மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேரை கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோகனூர்:

    மோகனூர் அருகே லத்துவாடி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் தெருவில் உள்ள விநாயகர் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கணவாய்பட்டியை சேர்ந்த சோலைமுத்து என்ற வீராச்சாமி (வயது 48), கணேசன் (55), திருப்பதி (32), வீராசாமி (58), நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்த பாலு (21), பெரியபட்டி அண்ணாநகரை சேர்ந்த செல்வராஜ் (37), கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த பாலாஜி (37) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 950 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல மோகனூர் அருகே லத்துவாடி கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள தண்ணீர்தொட்டி அருகே பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த கணவாய்பட்டியை சேர்ந்த சிதம்பரம் (45), ராமசாமி (36) நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்த சங்கர் (32), பெரியபட்டியை சேர்ந்த பழனிச்சாமி (46), கணவாய்பட்டி சேர்ந்த சுந்தர்ராஜ் (39), முருகேசன் (47), நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்த பொன்னுசாமி (27) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.830 மற்றும் 52 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×