என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்23 Oct 2020 8:50 AM GMT (Updated: 23 Oct 2020 8:50 AM GMT)
திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). அதே பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர், தி.மு.க. நகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இவர் தனது மரக்கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே அவர் சென்ற போது, அந்த வழியாக வந்த ஒரு கார், இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அருண்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண்குமாரின் தலை, உடலில் சரமாரியாக வெட்டியது. இதில் அவருடைய தலை சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் அருண்குமார் பிணமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் பிடிபட்டால் தான் அருண்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும்.
அருண்குமார் கொலை செய்யப்பட்டது குறித்த தகவலறிந்த அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டு அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X