என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடுவூர் அருகே தலையை துண்டித்து வாலிபர் கொலை- அண்ணன் கைது
Byமாலை மலர்23 Oct 2020 8:48 AM GMT (Updated: 23 Oct 2020 8:48 AM GMT)
வடுவூர் அருகே தாயை தாக்கியதால் தலையை துண்டித்து வாலிபரை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொண்டையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது 55). இவரது கணவர் வீரையன். இவர்களுடைய மகன்கள் சுப்பிரமணியன்(33), சுரேஷ்(29). அண்ணன்-தம்பி இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
நேற்று மாலை அண்ணன்-தம்பிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தனது கண் முன்பே மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டதை பார்த்த இந்திராணி தகராறை விலக்கி விட முயன்றார். அப்போது இந்திராணியை சுரேஷ் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சுரேசின் தலையில் பலமாக வெட்டினார். இதில் சுரேசின் தலை துண்டானது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திராணி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு சுரேஷ் தலை துண்டாகி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து வடுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பகவதிசரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்ரமணியனை கைது செய்தனர். மேலும் சுரேசின் உடல் மற்றும் தலையை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் தம்பியின் தலையை அண்ணன் துண்டித்து கொன்ற சம்பவம் வடுவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொண்டையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது 55). இவரது கணவர் வீரையன். இவர்களுடைய மகன்கள் சுப்பிரமணியன்(33), சுரேஷ்(29). அண்ணன்-தம்பி இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
நேற்று மாலை அண்ணன்-தம்பிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தனது கண் முன்பே மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டதை பார்த்த இந்திராணி தகராறை விலக்கி விட முயன்றார். அப்போது இந்திராணியை சுரேஷ் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சுரேசின் தலையில் பலமாக வெட்டினார். இதில் சுரேசின் தலை துண்டானது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திராணி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு சுரேஷ் தலை துண்டாகி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து வடுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பகவதிசரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்ரமணியனை கைது செய்தனர். மேலும் சுரேசின் உடல் மற்றும் தலையை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் தம்பியின் தலையை அண்ணன் துண்டித்து கொன்ற சம்பவம் வடுவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X