search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
    X
    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    * தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி தொடங்கக்கூடும்.

    * புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் 28ல் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.

    * வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும்.

    * வட தமிழகம், தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×