என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீ விபத்து
Byமாலை மலர்23 Oct 2020 8:30 AM GMT (Updated: 23 Oct 2020 8:30 AM GMT)
அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீப்பிடித்து ரூ.70 லட்சம் பஞ்சு பேல்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.
அவினாசி:
அவினாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி ராம்நகரில் கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இங்கு பஞ்சை அரைத்து நூலாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சு குடோனில் 10-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள், எந்திரத்தில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் அருகில் இருந்த கழிவு பஞ்சு மூட்டைகளிலும், மற்ற எந்திரங்களிலும் தீ பரவியது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் குடோனில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே திருப்பூர் மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு லாரிகளுடன் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் 15-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
3 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பேல்கள், எந்திரங்கள், பஞ்சுமூட்டைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதில் தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
இது குறித்து போலீசார் விசாரித்த போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X