என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்23 Oct 2020 4:57 AM GMT
‘தமிழகத்தில், திமுக ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.
1920-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சிதான் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கருணாநிதி வைத்துக் கொண்டார். தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது காமராஜர் என்றால், ஏராளமான கல்லூரிகளை திறந்து வைத்தவர் கருணாநிதி தான்.
ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998-ம் ஆண்டு உருவாக்கினார். முதல்-அமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000-ம் ஆண்டில் கட்டினார். கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி நெடுஞ்சாலை ஆக்கினார்.
இதுபோல பல திட்டங்களை செய்தவர் கருணாநிதி. இத்தகைய கருணாநிதி அரசு (தி.மு.க. ஆட்சி) இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.
1920-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சிதான் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கருணாநிதி வைத்துக் கொண்டார். தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது காமராஜர் என்றால், ஏராளமான கல்லூரிகளை திறந்து வைத்தவர் கருணாநிதி தான்.
ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998-ம் ஆண்டு உருவாக்கினார். முதல்-அமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000-ம் ஆண்டில் கட்டினார். கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி நெடுஞ்சாலை ஆக்கினார்.
இதுபோல பல திட்டங்களை செய்தவர் கருணாநிதி. இத்தகைய கருணாநிதி அரசு (தி.மு.க. ஆட்சி) இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X