என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் - தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு
Byமாலை மலர்22 Oct 2020 9:13 PM GMT (Updated: 22 Oct 2020 9:13 PM GMT)
விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் என்று தொடக்கக் கல்வி துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தொடக்கக் கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். எனவே அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வரும் 26-ம் தேதி (விஜயதசமி) மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் அறியும் வகையில் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அரசு பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று 5 வயதுடைய குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X