search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோட்டூர் அருகே விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை

    கோட்டூர் அருகே விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கோட்டூர்:

    கோட்டூர் அருகே குன்னியூர் அக்ரகாரம் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து. இவரது மகள் கவுசல்யா(வயது22). எம்.ஏ. பட்டதாரியான இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கவுசல்யா விஷத்தை குடித்தார். 

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா இறந்தார். இதுகுறித்து மாரிமுத்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×