search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவள்ளூர் அருகே பிறப்பு சான்றிதழ் பெற மோசடியில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது

    திருவள்ளூர் அருகே பிறப்பு சான்றிதழ் பெற மோசடியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணி சூரியநகரம், ராமர் கோவில்தெரு, மேல் மாட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 28). கார் டிரைவர். இவர் தனக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார். திருத்தணி கோர்ட்டு ஆவணத்தில் இருந்த ஆறுமுகம் பெயரை மோசடியாக மாற்றி அதனை திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு பிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். இதை அறிந்த திருத்தணி பகுதி பைபாஸ் சாலையை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மோசடி செய்து பிறப்பு சான்றிதழ் வாங்கிய நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று நாராயணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×