என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 63 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்22 Oct 2020 8:14 AM GMT (Updated: 22 Oct 2020 8:14 AM GMT)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர் அடங்குவர். இதுதவிர அம்பை, வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 977-ஆக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7,759-ஆக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 593-ஆக உள்ளது. இதில் 13 ஆயிரத்து 964 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 126 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர் அடங்குவர். இதுதவிர அம்பை, வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 977-ஆக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7,759-ஆக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 593-ஆக உள்ளது. இதில் 13 ஆயிரத்து 964 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 126 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X