என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்முதல் நிலையத்தில் முறைகேடு- பட்டியல் எழுத்தர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்21 Oct 2020 10:26 AM GMT (Updated: 21 Oct 2020 10:26 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக பட்டியல் எழுத்தர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மன்னார்குடி தாலுகா கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் ஆய்வின் போது கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் குடவாசல் தாலுகா கூந்தலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் தொடர்பாக விவசாயியிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுவின் அடிப்படையில் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் உரிய ஆவணங்களை பெற்று எவ்வித புகாருக்கும் இடமின்றி கொள்முதல் செய்திட வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மன்னார்குடி தாலுகா கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் ஆய்வின் போது கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் குடவாசல் தாலுகா கூந்தலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் தொடர்பாக விவசாயியிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுவின் அடிப்படையில் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் உரிய ஆவணங்களை பெற்று எவ்வித புகாருக்கும் இடமின்றி கொள்முதல் செய்திட வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X