என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது- பொதுமக்கள் நிம்மதி
Byமாலை மலர்21 Oct 2020 8:09 AM GMT (Updated: 21 Oct 2020 8:09 AM GMT)
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கரூர்:
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவியது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் வேகமாக காணப்பட்டது. தினமும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. அதேசமயம் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்தே உள்ளது.
இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பழைய ரெங்கபாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர், திண்ணப்பா நகரை சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் 40 வயது பெண், அண்ணாநகரை சேர்ந்த 47 வயது பெண் உள்ளிட்ட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவியது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் வேகமாக காணப்பட்டது. தினமும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. அதேசமயம் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்தே உள்ளது.
இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பழைய ரெங்கபாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர், திண்ணப்பா நகரை சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் 40 வயது பெண், அண்ணாநகரை சேர்ந்த 47 வயது பெண் உள்ளிட்ட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X