search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருமணம் ஆன 3-வது மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை

    காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மூன்றாவது மாதத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி படித்து போது, சக மாணவியான திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்பவரை காதலித்துள்ளார். படிப்பை முடித்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் வெங்கடேஷூம், ஸ்டெல்லாவும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

    வெங்கடேஷ் தமது மனைவி ஸ்டெல்லாவுடன் சுபம் நகர் பகுதியில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், காலையில் வழக்கம் போல எழுந்த ஸ்டெல்லா குளித்துவிட்டு, உடை மாற்றுவதற்காக படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராத நிலையில், கதவை தட்டியபோது, உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே இருந்து எந்த பதிலும் வராத நிலையில், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, ஸ்டெல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×