search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்.
    X
    விபத்தில் சிக்கிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்.

    பரமக்குடி அருகே விபத்து: மாமனார்-மருமகள் பலி

    பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாமனார்-மருமகள் பரிதாபமாக இறந்தனர்.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது60). இவரும் இவரது மருமகள் பாண்டியம்மாளும் (40) பரமக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எஸ்.அண்டக்குடி கிராமத்திற்கு சென்றனர்.

    பாம்புவிழுந்தான் பகுதியில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது.

    இதில் 2 பேரும் கீழே விழுந்து காரின் முன்பகுதியில் சிக்கினர். சுமார் 100 மீட்டர் தூரத்துக்குமேல் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுந்தரராஜ், பாண்டியம்மாள் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும் காரில் வந்தவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான சுந்தரராஜ், பாண்டியம்மாள் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×