என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2020 8:48 AM GMT (Updated: 20 Oct 2020 8:48 AM GMT)
நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை:
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பினு. இவருடைய மகள் ஜினு (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
நேற்று மதியம் வீட்டில் அறையில் இருந்த ஜினு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்ற போது, ஜினுவின் உடல் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பினு. இவருடைய மகள் ஜினு (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
நேற்று மதியம் வீட்டில் அறையில் இருந்த ஜினு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்ற போது, ஜினுவின் உடல் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X