search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பல்லடம் நால் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பல்லடம்:

    பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் சட்டப்படியான ஆவணங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிப்பது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சார்பதிவாளர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பல்லடம் நால் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரகுமார், ராஜசேகரன், ஜெகதீஷ் (தி.மு.க.), ஈஸ்வரமூர்த்தி, மணிராஜ், நரேஷ்குமார் (காங்கிரஸ்), முத்துரத்தினம், மு.சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் (ம.தி.மு.க.), ப.கு.சத்தியமூர்த்தி, சாகுல்அமீது (கம்யூனிஸ்டு), சுப்பிரமணியம், முத்துகுமார் (த.மா.கா.) காளப்பட்டி பொன்னுசாமி, பாலசுப்பிரமணியம் (மதசார்பற்ற ஜனதா தளம்), ரங்கசாமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஈசன், சோமசுந்தரம், பழனிசாமி (விவசாய சங்கங்கள்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
    Next Story
    ×